சென்னை மழை பாதிப்பு: உதவி எண்கள் அறிவிப்பு

சென்னையில் மழை பாதிப்பு ஏற்பட்டால் பொதுமக்கள் தொடர்புகொள்ள உதவி எண்களை மாநகராட்சி அறிவித்துள்ளது.


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று மாலை தொடங்கிய மழை இரவு முழுவதும் கொட்டி தீர்த்தது. நுங்கம்பாக்கம், ஈக்காட்டுத்தாங்கல், கே.கே.நகர், அண்ணாசாலை, கிண்டி, ராமாபுரம், வடபழனி, பாடி, வில்லிவாக்கம், அம்பத்தூர் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்தது.


சென்னை மாநகரம் முழுவதும் பெய்த மழையால் சாலைகள் எங்கும் வெள்ளம் சூழ்ந்து, போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சில இடங்களில் வீடுகளை மழை நீர் சூழ்ந்ததால் மக்கள் பாதிக்கப்பட்டனர். தொடர் மழையின் காரணமாக இரவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.


இந்நிலையில் சென்னையில் மழை பாதிப்பு ஏற்பட்டால் பொதுமக்கள் தொடர்புகொள்ள உதவி எண்களை மாநகராட்சி அறிவித்துள்ளது. மழை பாதிப்பு குறித்து 044-25384520, 044-25384530, 044-25384540 என்ற எண்களிலும்,  9445477205 என்ற வாட்ஸ் அப் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.


Popular posts
மால், திரையரங்கில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்க அரசு உத்தரவிட வேண்டும் - தமிழ்நாடு முஸ்லிம் லீக் வலியுறுத்தல்
Image
சர்ச்சில் புனிதநீரை வாயில் ஊற்றியதால்வேகமாக பரவிய கொரோனா - பாதிரியார்,மனைவி உட்பட 46 பேருக்கு நோய் பாதிப்பு
Image
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்டத்தை நடப்பு சட்டசபை கூட்டத்தொடரில் நிறைவேற்ற வேண்டும் - தமிழ்நாடு முஸ்லிம் லீக் கோரிக்கை February 10, 2020 • Muthu kumar • அறி
Image
மதுரை திருப்பரங்குன்றம் ஊராட்சி மற்றும் ஒன்றியத்திற்கு உட்பட்ட மூன்று ஊராட்சிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கை.
Image
இனிப்பு இல்லாத சுயிங்கம் சாப்பிட்டவர்களின் வாய் பகுதி சுகாதாரம், அவர்களை தாக்கிய பல் நோய்கள், சுயிங்கம் மெல்லுவதன் தாக்கம்